திங்கள், 24 ஆகஸ்ட், 2015

யாரும் நீதிமான் சனிஸ்வரரிடம் தப்ப முடியாது!!!


தென்னாடுடய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!




ராவணன்னு சொன்னாலே சின்ன குழந்தைல இருந்து பெரியவங்க வரை தெரியாதவங்க யாரும் இல்லை....

”ராவணன் ரொம்ப மோசமானவன், அரக்கன்” இப்படியெல்லாம் சொல்லிதான் ராமயண கதை சொல்லுவாங்க... எனக்கும் சின்ன வயசுல அப்படித்தான் கதை சொன்னாங்க......

ஆனா உன்மை என்ன?? ராவணன் பல வருஷம் வாழ்ந்தப்போ ஏன் அவன் அரக்கனா தெரியல?? ராமகாதையில் மட்டும் ஏன் அவ்வாறு நடந்துகொண்டான்???

ஓகே.... லெட்ஸ் ஸ்டார்ட் த ஸ்டோரி.....!! :) :)




ராவணன் உண்மையில் ஒரு சிவ பக்தன். ஒரு சிவ பக்தன் மட்டும் இல்லை ‘திரு சிவ பக்தன்’. அதாவது, சிவபக்தர்களில் சிறந்தவன். அவனது நகரமான இலங்கைதான் உலகில் செல்வ செழிப்போடு இருந்தது. இலங்கை மக்கள் அனைவரும் அனைத்து வசதிகளோடு இருக்க செங்கோலாட்சி நடத்தி வந்தான். வாரி வழங்கும் வள்ளல்.

ஒரு சிவலிங்கத்தை கூட அசைக்கமுடியாத அரக்கர்கள் மத்தியில் எம்பெருமான் வாழும் கயிலாய மலையை பெயர்த்து எடுத்தவன் ராவணன். பூரண சிவபக்தியில்லமல் இது முடியுமா?? கயிலாயத்தில் ஒரு புல்லைக்கூட அசைக்க முடியாது.



இத்தகய சிவ பக்தன் எவ்வாறு வழிமாறி சென்றான்???

ராவணன் இப்பிறவியில் என்னதான் சிற்ந்து இருந்தாலும், முற்பிறவியில் செய்த சில கர்மங்களுக்கு பதில் சொல்ல வேண்டுமல்லவா!!!

பிறந்ததிலிருந்து ராஜ வாழ்க்கையை அனுபவித்த அவனுக்கு, கர்மங்களை வினையாக்கும் நவகிரகங்களால் தீமை வரவுள்ளது என்று அறிந்தான்.மேழும் நவகிரகங்களை பிடித்தால் தன் நாட்டு மக்களின் விதியையும் மாற்றலம் என்றுணர்ந்தான். உடனே தன் தவ வலிமையாலும், பக்தியின் சிரத்தையாலும் நவகிரகங்களான சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய எல்லோரயும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

அவன் விருப்பம் போலவே அனைத்தும் நடந்தது. தன் பராக்கிரமத்தை உலகிற்கு காண்பிக்க. உலகை இயக்கும் கருவிகளான நவகிரகங்களை தன் அரியனயின் கீழ் படுக்கச்செய்து அவர்களை படியாக்கி தினமும் அவர்கள் மீது ஏறி அரியனையில் அமர்வான்.

இவ்வாறு காலங்கள் சென்றன. ராவணனும் தன் ஊழ்வினைப்பயனை அனுபவிக்காமல் வாழ்ந்து வந்தான். தேவர்கள் நாரதரை உதவச்சொல்லி வேண்டினர்.

நாரதருக்கு இந்தமாறி வேலையெல்லம் சொல்லியா குடுக்கனும்.. :)

ராவணன் சபைக்கு சென்றார் நாரதர். அங்கே நவகிரகங்களின் மீது ராவணன் ஏறிச்சென்று அரியனையில் அமர்வதை கண்டார்.  அதில் அனைத்து கிரகங்களும் மேல்நோக்கி படுத்திருந்தனர் சனீ’ஸ்வரர்’ மட்டும் பூமியை நோக்கி படுத்திருதார். ராவணனும் இதை ஒரு பொருட்டாக எடுட்துக்கொள்ளவில்லை. இதைப்பார்த்த நாரதருக்கு வந்த வேலை சுலபமாயிருச்சு... :)

ராவணனிடம், 8 கிரகங்களும் உன்னை மதித்து மேல்நோக்கி படுத்திருக்கயில் சனீஸ்வர் மட்டும் எதிர்திருக்கிரார் என்னே அவரது துணிவு என்று சனிபகவானை புகழாரம் பாடினார்.

இதை கேட்ட ராவணன் சும்மா இருப்பானா!! ‘சனீஸ்வரரே நாளை முதல் நீரும் எம்மை வணங்கியவாரே மேல்நோக்கி படுக்க வேண்டும்’ என்று கட்டளையிட்டான். தன் பார்வையின் பலமறிந்த சனீஸ்வரர் கீழ் குனிந்தபடி மறுத்தார். எனினும் ராவணன் அவரை விடவில்லை.

வேறுவழியின்றி சனிபகவான் மேல்நோக்கி படுத்தார். ராவணன் ஏறும்போது சனியின் மார்பில் காலை வைத்தான். சனியின் பார்வை நேராக ராவணன் மேல் விழுந்தது.

தர்மத்தை காக்கும் கர்மகாரகன் சனீஸ்வரர். அவர் பார்வை பட்டதும் ராவணனின் கர்மவினைகள் அவனை வந்து சூழ்ந்துகொண்டன.

ராவணன் பலம் குன்றினான். முற்பிறவிக்கேற்ப செயல்கள் நிகழத்தொடங்கின. அக்ந்தை அவனை ஆட்கொண்டது. அது ஒன்று போதுமே அவன் வீழ்ச்சிக்கு. பின் நடந்தவயெல்லாம் தான் ராமாயணம்.

எனினும் சிறந்த சிவ பக்தனானதால் அவனுக்கு நாராயணரின் அவதாரமான ராமர் கையால் மரணம் ஏற்பட்டு முக்தியடைந்தான்.

சனிபகவான் கர்மகாரகனாவார். நாம் முற்பிறவியில் செய்த வினைகள் யாவும் இப்பிறவியில் சனிபகவானால் தான் நமக்கு அளிக்கப்படுகிறது. செய்த செயலுக்கு பலன் அனுபவித்தே தீரவேண்டும். நல்லதாய் இருந்தால் நல்லது தீயதாய் இருந்தால் தீயது. யாரும் நீதிமான் சனிஸ்வரரிடம் தப்ப முடியாது.


ஓம் நம சிவாய!!






4 கருத்துகள்: