வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சிவன் - முதல் சித்தர்

தென்னாடுடய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்கும் இறைவா போற்றி!!!


இந்த அண்டமானது சாதாரன மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மனித சமூகத்தால் உருவாக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மேன்மேலும் வளர்ந்துள்ளது. எனினும், அந்த அறிவியலால் அவிழ்க்கப்படத முடிச்சுகள் பூமிக்கு உள்ளும் வெளியிலும் ஏராளமாக உள்ளன.

இவ்வாறிருக்கயில்,பகுத்தறிவு என்ற பெயரில் அறிவியலைக் காரணம் காட்டி ஆன்மீகத்தை பரிகாசிப்பது முறையற்ற செயல். இன்று அறிவியல் அறிஞர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாய் ஆய்ந்து கண்ட உண்மைகளை, நம் முன்னோர்கள் தனி ஒருவராக தம் மெய்ஞானத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  கண்டுணர்ந்திருக்கின்றனர்.

அவ்வாறு மெய்ஞானம் பெற்று தீர்க்கதரிசியாய் வாழ்ந்தவர்க்ள்(ஏன், இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்), தனது புலன்களை அடக்கி அட்டமாசித்திகளை வசப்படுத்தி அண்டத்தை வலம் வந்தனர்.



மனிதனாகப் பிறந்து சித்தி பெற்றவரை சித்தர் என்று அழைத்தால், பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதில் உள்ள அணு முதல் அண்டம் வரை அனைத்திலும் நிறைந்திருக்கும் தேவனுக்கெல்லம் தேவனான சிவபெருமானை ‘சித்தனுக்கெல்லாம் சித்தன்’ என்று சொல்வதில் தவறேதுமில்லையே!!! தன்னை எண்ணி தவம் இருப்பவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சித்திகளை அருளும் ‘ஆதி சித்தன்’ சிவபெருமான்.

ஓம் நம சிவாய!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக