தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
“ஏம்ப்பா இன்னைக்கு அஷ்டமி இன்னைக்கா கார் வாங்க போற?!!” “நவமி முடிஞ்சு நல்ல காரியம் பன்னிகலாம்பா” இப்படியெல்லம் பேச்சுவழக்கில் கேட்டிருக்கிறோம்.
அதென்ன அஷ்டமி, நவமி?
அது வேற ஒன்னும் இல்ல, பெளர்ணமி அமாவாசைக்கு 8ஆம் நாள் அஷ்டமி, 9ம் நாள் நவமி. சந்திரனின் ஒரு நிலை (வளர்ந்த அல்லது தேய்ந்த) தான் அது. திதி என்றும் சொல்வார்கள்.
ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதைகள் உண்டு. மனிதர்கள் எப்பொழுதும் அஷ்டமி, நவமி திதியை விலக்கி மற்ற திதிகளில் யாகம், திருமணம் முதலான நல்ல காரியங்களை நடத்தி வந்தனர். இதைப் பொறுக்காத அஷ்டமியும், நவமியும் சந்திரனிடம் முறையிட்டனர்.
“அடப்போங்கப்பா, உங்களுக்கு மட்டுமா பிரச்சனை!! எனக்கும்தான். அஷ்டமி நவமிகளில் நல்லகாரியம் செய்யாததனால். எனக்கும் சக்தி குறைந்துவிடுகிறது” என்று புலம்பினான் சந்திரன்.
படைத்த பிரம்மாவிடம் சென்று கேட்டனர்.
“பிரம்ம தேவரே, எங்கள் இருவரையும் ஏன் மக்கள் கொண்டாடுவதில்லை? நாங்கள் என்ன தவறு செய்தோம், ஏன் வேதங்களில் அஷ்டமி நவமியை சுப காரியங்களுக்கு ஒதுக்கவில்லை?” என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பிரமன், ஒரு காரணத்திற்காகவே இது வகுக்கப்பட்டுள்ளது என்றும், திருமாலிடம் இதை கேளுங்கள் என்று சஸ்பன்ஸ் வைத்து அனுப்பினார்.
நேராக திருமாலிடம் சென்று அதே கேள்வியை கேட்டனர். அதற்க்கு நாராயணர், நீங்கள் கவலைப்படத் தேவயில்லை. அஷ்டமி, நவமி இந்த இரண்டு திதிகளும் மற்ற திதிகளை விட அதிக முக்கியத்துவம் பெறும் நாள் நெருங்கிவிட்டது என்றார். தேவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
திரும்ப புலம்பினர். ”உங்கள் திதிகள் ஆகாதவைகள் தான், ஆனால் மக்களுக்கு அல்ல. அராஜகம் செய்யும் அரக்கர்களுக்கு. திரேதா யுகத்தில் நான் ராமாவதாரம் செய்யப்பொகும் நாள் நவமி திதியாகும். அன்று ராவனாசுரனின் அழிவு நிச்சயிக்கப்படும். அதேபோல் துவாபர யுகத்தில் நான் அஷ்டமி திதியில் கிருஷ்ணாவதாரம் செய்வேன். அன்று பிறந்து துஷ்ட கம்சனை வதைப்பேன். இந்த இரண்டு நாட்களும் ‘ராமநவமி’,’கோகுலாஷ்டமி’ என்று திதிகளாகிய உங்கள் பெயர் கொண்டே சிறப்பாக கொண்டாடப்படும்” என்று கூறினார் நாராயணர்.
அதே போன்று நிகழ்ந்தது. இதன் காரணம் மற்றைய நாட்களில் தனது நலத்திற்காகவே நல்ல காரியம் செய்யும் மனிதன் இந்த இரண்டு திதிகளிலாவது கடவுளை வணங்கட்டும் என்ற நோக்குடனே இது நிகழ்ந்தது.
மேலும் துர்க்காஷ்டமி, அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு ஆகியன சிறப்பாகும்.
ஓம் நம சிவாய!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
“ஏம்ப்பா இன்னைக்கு அஷ்டமி இன்னைக்கா கார் வாங்க போற?!!” “நவமி முடிஞ்சு நல்ல காரியம் பன்னிகலாம்பா” இப்படியெல்லம் பேச்சுவழக்கில் கேட்டிருக்கிறோம்.
அதென்ன அஷ்டமி, நவமி?
அது வேற ஒன்னும் இல்ல, பெளர்ணமி அமாவாசைக்கு 8ஆம் நாள் அஷ்டமி, 9ம் நாள் நவமி. சந்திரனின் ஒரு நிலை (வளர்ந்த அல்லது தேய்ந்த) தான் அது. திதி என்றும் சொல்வார்கள்.
ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதைகள் உண்டு. மனிதர்கள் எப்பொழுதும் அஷ்டமி, நவமி திதியை விலக்கி மற்ற திதிகளில் யாகம், திருமணம் முதலான நல்ல காரியங்களை நடத்தி வந்தனர். இதைப் பொறுக்காத அஷ்டமியும், நவமியும் சந்திரனிடம் முறையிட்டனர்.
“அடப்போங்கப்பா, உங்களுக்கு மட்டுமா பிரச்சனை!! எனக்கும்தான். அஷ்டமி நவமிகளில் நல்லகாரியம் செய்யாததனால். எனக்கும் சக்தி குறைந்துவிடுகிறது” என்று புலம்பினான் சந்திரன்.
படைத்த பிரம்மாவிடம் சென்று கேட்டனர்.
“பிரம்ம தேவரே, எங்கள் இருவரையும் ஏன் மக்கள் கொண்டாடுவதில்லை? நாங்கள் என்ன தவறு செய்தோம், ஏன் வேதங்களில் அஷ்டமி நவமியை சுப காரியங்களுக்கு ஒதுக்கவில்லை?” என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பிரமன், ஒரு காரணத்திற்காகவே இது வகுக்கப்பட்டுள்ளது என்றும், திருமாலிடம் இதை கேளுங்கள் என்று சஸ்பன்ஸ் வைத்து அனுப்பினார்.
நேராக திருமாலிடம் சென்று அதே கேள்வியை கேட்டனர். அதற்க்கு நாராயணர், நீங்கள் கவலைப்படத் தேவயில்லை. அஷ்டமி, நவமி இந்த இரண்டு திதிகளும் மற்ற திதிகளை விட அதிக முக்கியத்துவம் பெறும் நாள் நெருங்கிவிட்டது என்றார். தேவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
திரும்ப புலம்பினர். ”உங்கள் திதிகள் ஆகாதவைகள் தான், ஆனால் மக்களுக்கு அல்ல. அராஜகம் செய்யும் அரக்கர்களுக்கு. திரேதா யுகத்தில் நான் ராமாவதாரம் செய்யப்பொகும் நாள் நவமி திதியாகும். அன்று ராவனாசுரனின் அழிவு நிச்சயிக்கப்படும். அதேபோல் துவாபர யுகத்தில் நான் அஷ்டமி திதியில் கிருஷ்ணாவதாரம் செய்வேன். அன்று பிறந்து துஷ்ட கம்சனை வதைப்பேன். இந்த இரண்டு நாட்களும் ‘ராமநவமி’,’கோகுலாஷ்டமி’ என்று திதிகளாகிய உங்கள் பெயர் கொண்டே சிறப்பாக கொண்டாடப்படும்” என்று கூறினார் நாராயணர்.
அதே போன்று நிகழ்ந்தது. இதன் காரணம் மற்றைய நாட்களில் தனது நலத்திற்காகவே நல்ல காரியம் செய்யும் மனிதன் இந்த இரண்டு திதிகளிலாவது கடவுளை வணங்கட்டும் என்ற நோக்குடனே இது நிகழ்ந்தது.
மேலும் துர்க்காஷ்டமி, அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு ஆகியன சிறப்பாகும்.
ஓம் நம சிவாய!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக