ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நான் வைகுண்டம் போவேனா ??

வணக்கம்........

ஒருமுறை  வியாசர் அவரோட சீடர் 'கனகதாசன்' கிட்ட ஒரு கேள்வி கேட்டார்.

"கனக தாசா...!! நம்முள் யார் வைகுண்டம் போவார்கள் ??" என கேட்டார் . கனக தாசர் பதில் கூறவில்லை. பின் ஒவ்வொரு சீடனாக கை காட்டி "இவன் வைகுண்டம் போவானா?" எனக்கேட்டார். அனைவருக்கும்  கனகதாசன் "இல்லை" என பதிலளித்தார் .

பின் வியாசர் "நான் வைகுண்டம் போவேனா?" என கேட்டார். அதற்கும் கனக தாசர் "இல்லை" என கூறினார் .

சீடர்கள் அனைவரும் கனக தாசன் மீது ஆத்திரம் கொண்டனர். அனால் வியாசர் பொறுமையாய், "சரி , நீ வைகுண்டம் போவாயா?" எனக்கேட்டார் .

அதற்க்கு கனக தாசன் "நான் போனால் போவேன் " என்று பதிலளித்தார். இதைக்கேட்ட சீடர்களின் கோபம் அதிகமாயிற்று . ஒரு சீடன் எழுந்து "கனக தாசா  குருவிடம் நீ பேசும் வார்த்தை தகாதவை " என்று கண்டித்தான் .


வியாசர் அவனை அமர்த்தி விட்டு பொறுமையாய் " கனக தாசா எவ்வாறு கூறுகிறாய்?" என கேட்டார்.   

அதற்க்கு கனகதாசன் "குருவே, நான் அளித்த பதில், "நான் " என்னும் அகந்தை என்னை விட்டு போனால் நான் வைகுண்டம் போவேன்" என்று கூறினார்.  

அப்போது தான் சீடர்களுக்கு விளங்கியது . 


எனவே "நான்" என்னும் அகந்தையை விட்டு இறைவனடி சேரும் வழியை தேட வேண்டும்...   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக