தென்னாடுடைய சிவனே போற்றி !!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
கோடி ரூபாய்க்கு பங்களா, லட்ச ரூபாய்க்கு கார், அழகான மனைவி குழந்தைகள் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கரவன பாத்தா முதல்ல நம்ம நாக்குல வர்ற வாக்கு "அவனுக்கென்னப்பா சுக்கிரன் உச்சத்துல இருக்கான்".
ஒன்பது கிரகங்களில் சுக்கிரனுக்கு மட்டும் அப்படி என்ன வெயிட்டேஜ்??
சுக்கிராச்சாரியார் அசுரகுருவாவார். அப்படின்னா அவர் தீய கிரகமா? - இல்லை .
அனால் அவர் அசுரர்களின் குருவாக மட்டும் இருந்தார்.
அவர் பிருகு முனிவரின் மகன். முதலில் அவர் தந்தையை குருவாக ஏற்றார். பின்னர் பிரகஸ்பதி குரு பகவானிடம் சீடனாக இருந்தார்.
வித்தை பல கற்றும் திருப்தி அடையாத சுக்கிராச்சாரியார், சிவனை நோக்கி தவம் இருந்து பரமேஸ்வரனையே குருவாகப்பெற்றார். இவரின் குருபக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், யாரும் கற்றிடாத அம்ருத சஞ்சீவினி மந்திரத்தை சுக்கிராச்சாரியாருக்கு உபதேசித்தார்.
தேவர்களிடம் அமிர்தம் உள்ளது. ஆனால் அசுரர்களிடம் அவர்கள் குலத்தை காப்பதற்கு அமிர்தத்திற்கு நிகரான எந்த ஆயுதமும் இல்லை. அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் பரமேஸ்வரன், அசுரர் குலத்தை காக்க அமிர்த சஞ்சீவினி மந்திரம் அறிந்த சுக்கிராச்சாரியாரை அசுர குருவாக பதவியேற்கும்படி கேட்டார்.
தன் குருவின் விருப்பப்படி அசுரகுருவாகினார் சுக்கிராச்சாரி. ஒவ்வொருமுறை தேவாசுர யுத்தம் நடந்த போதும் மாண்ட அசுரர்களை சிவன் அருளால் தன் சஞ்சீவினி சக்தியை கொண்டு மீண்டும் உயிர் பெறச்செய்தார்.
அனால் இவருக்கு எவ்வாறு கிரக பதவி கிடைத்தது??
சிவனின் குரோத சக்தியில் இருந்து தோன்றியவன் ஜலந்தரன். இந்த ஜலாசுரன் பார்க்க சிவனின் உருவத்தை ஒத்திருந்தான். அவன் அறவழியை மீறி அராஜகம் செய்தான் சிவனின் சக்தி என்பதால் தேவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சுக்கிராச்சாரியார் தன் குருவான சிவனின் உருவத்தில் இருக்கும் ஜலாசுரனை கண்டிக்க முடியாமல் அசுரர்களிடம் இருந்து பிரிந்து சென்றார்.
சுக்கிராச்சாரியாரின் பெருந்தன்மையை பார்த்த சிவபெருமான், ஜலந்தரனின் வதம் முடிந்ததும் அவரது பதவியான அசுரகுரு பதவியையும் கூடவே நவகிரகங்களில் ஒருவராக கிரக பதவியையும் சுக்கிரனுக்கு சிவன் அளித்தார்.
சுக்கிரனின் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தின் சிறப்பால் தான், ஜாதகத்தில் சுக்கிரன் ஆயுள் ஸ்தானமான 8ம் ஆதிபத்யம் பெற்று பலமாக இருந்தாலும் , 8ம் இடத்தில் கெடாமல் பலமாக இருந்தாலும், மற்ற கிரகங்காளல் மரணம் பெறும் நிலை ஏற்பட்டாலும் ஜாதகன் அதிலிருந்து மீண்டு வருவான். இதை நடைமுறையிலும் கண்கூடாக பார்க்க முடியும்
டாக்டர்கள் சொல்லும் "இட் இஸ் எ மெடிக்கல் மிராக்கிள் (It is a medical miracle)"
அதற்க்கு சொந்தமான அமைப்பு இதுதான்...
அடுத்த பதிவில் சந்திப்போம்..
இந்த பக்கத்தில் வெளிவரும் பதிவுகள் பிடித்திருந்தால் "Follow" செய்யவும் .
ஓம் நம சிவாய!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
கோடி ரூபாய்க்கு பங்களா, லட்ச ரூபாய்க்கு கார், அழகான மனைவி குழந்தைகள் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கரவன பாத்தா முதல்ல நம்ம நாக்குல வர்ற வாக்கு "அவனுக்கென்னப்பா சுக்கிரன் உச்சத்துல இருக்கான்".
ஒன்பது கிரகங்களில் சுக்கிரனுக்கு மட்டும் அப்படி என்ன வெயிட்டேஜ்??
சுக்கிராச்சாரியார் அசுரகுருவாவார். அப்படின்னா அவர் தீய கிரகமா? - இல்லை .
அனால் அவர் அசுரர்களின் குருவாக மட்டும் இருந்தார்.
அவர் பிருகு முனிவரின் மகன். முதலில் அவர் தந்தையை குருவாக ஏற்றார். பின்னர் பிரகஸ்பதி குரு பகவானிடம் சீடனாக இருந்தார்.
வித்தை பல கற்றும் திருப்தி அடையாத சுக்கிராச்சாரியார், சிவனை நோக்கி தவம் இருந்து பரமேஸ்வரனையே குருவாகப்பெற்றார். இவரின் குருபக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், யாரும் கற்றிடாத அம்ருத சஞ்சீவினி மந்திரத்தை சுக்கிராச்சாரியாருக்கு உபதேசித்தார்.
தேவர்களிடம் அமிர்தம் உள்ளது. ஆனால் அசுரர்களிடம் அவர்கள் குலத்தை காப்பதற்கு அமிர்தத்திற்கு நிகரான எந்த ஆயுதமும் இல்லை. அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் பரமேஸ்வரன், அசுரர் குலத்தை காக்க அமிர்த சஞ்சீவினி மந்திரம் அறிந்த சுக்கிராச்சாரியாரை அசுர குருவாக பதவியேற்கும்படி கேட்டார்.
தன் குருவின் விருப்பப்படி அசுரகுருவாகினார் சுக்கிராச்சாரி. ஒவ்வொருமுறை தேவாசுர யுத்தம் நடந்த போதும் மாண்ட அசுரர்களை சிவன் அருளால் தன் சஞ்சீவினி சக்தியை கொண்டு மீண்டும் உயிர் பெறச்செய்தார்.
அனால் இவருக்கு எவ்வாறு கிரக பதவி கிடைத்தது??
சிவனின் குரோத சக்தியில் இருந்து தோன்றியவன் ஜலந்தரன். இந்த ஜலாசுரன் பார்க்க சிவனின் உருவத்தை ஒத்திருந்தான். அவன் அறவழியை மீறி அராஜகம் செய்தான் சிவனின் சக்தி என்பதால் தேவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சுக்கிராச்சாரியார் தன் குருவான சிவனின் உருவத்தில் இருக்கும் ஜலாசுரனை கண்டிக்க முடியாமல் அசுரர்களிடம் இருந்து பிரிந்து சென்றார்.
சுக்கிராச்சாரியாரின் பெருந்தன்மையை பார்த்த சிவபெருமான், ஜலந்தரனின் வதம் முடிந்ததும் அவரது பதவியான அசுரகுரு பதவியையும் கூடவே நவகிரகங்களில் ஒருவராக கிரக பதவியையும் சுக்கிரனுக்கு சிவன் அளித்தார்.
சுக்கிரனின் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தின் சிறப்பால் தான், ஜாதகத்தில் சுக்கிரன் ஆயுள் ஸ்தானமான 8ம் ஆதிபத்யம் பெற்று பலமாக இருந்தாலும் , 8ம் இடத்தில் கெடாமல் பலமாக இருந்தாலும், மற்ற கிரகங்காளல் மரணம் பெறும் நிலை ஏற்பட்டாலும் ஜாதகன் அதிலிருந்து மீண்டு வருவான். இதை நடைமுறையிலும் கண்கூடாக பார்க்க முடியும்
டாக்டர்கள் சொல்லும் "இட் இஸ் எ மெடிக்கல் மிராக்கிள் (It is a medical miracle)"
அதற்க்கு சொந்தமான அமைப்பு இதுதான்...
அடுத்த பதிவில் சந்திப்போம்..
இந்த பக்கத்தில் வெளிவரும் பதிவுகள் பிடித்திருந்தால் "Follow" செய்யவும் .
ஓம் நம சிவாய!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக