தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!
எல்லோருக்கும் தெரிந்த கதை, ஞானப்பழத்துக்காக முருகன் தன் குடும்பத்திடம் சண்டை போட்டுக்கொண்டு பழனி மலையில் வந்து அமர்ந்தது. அதன் பிறகு சண்முகனை சமாதானப்படுத்த சிவனும் சக்தியும் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர்.
பழனியில் பாய்ந்தோடும் சண்முகநதிக்கரையில் இறங்கினர். அங்கே இருந்த இயற்க்கை வனப்பைக்கண்ட சிவனும் சக்தியும் தங்களை மறந்து இயற்க்கையின் எழிலை ரசித்தவன்னம் இருந்தனர். அப்போது சக்திக்கு திடீரென்று நாம் எதற்கு வந்தோம் என்ற நினைவு வந்தது. முருகன் கோபமாக வந்தானே அவனைத்தேடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
சிவனை அழைத்தபோது, இயற்க்கையின் அழகை ரசித்துக்கொண்டிருந்த அவர் மனம் அதிலிருந்து விளக்க மறுத்தது. எனவே சக்தி மட்டும் முருகனை தேடிச்செல்ல ஆயத்தமானார்.
அப்போது சிவனை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார் அன்னை. பிறகு முருகனை சமாதானப்படுத்த தன சக்தியை ஒன்றாக திரட்டி வேலை முருகனுக்கு அளித்தார்.
இப்பொழுதும் பழனியில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பழனிக்கு வெளியில் பெரியாவுடையார் கோவில் உள்ளது. இதன் பெயர் காரணம், சிவன் சக்தியை பிரிய மனமில்லாது விடைகொடுத்ததால், பிரியாவிடையார் என்றும். பிரிந்து சென்றாலும் சிவனை ஒரு பாகமாக கொண்டு என்றும் பிரியாத அன்னை, பிரியாநாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.
நாளடைவில் இது மருவி பெரியாவுடையார் என்றும் பெரியநாயகி என்றானது.
பெரியாவுடையார் கோவிலின் சிறப்புகள் :
* இக்கோவில் சண்முக நதிக்கரையோரம் அமைந்துள்ளது
* சிவலிங்கம் மேற்குபார்த்து (சண்முக நதியை பார்த்து ) அமைந்தது சிறப்பு
* இந்த கோவிலில் சக்தி தேவியின் எந்த சொரூபமும் இல்லை சிவன் மட்டும் தனியாக உள்ளார்
இத்தகைய சிறப்பு மிக்க ஆலயம் பழனியிலிருந்து 4 கீ.மீ தூரத்தில் உள்ள மானூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
ஓம் நம சிவாய!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!
எல்லோருக்கும் தெரிந்த கதை, ஞானப்பழத்துக்காக முருகன் தன் குடும்பத்திடம் சண்டை போட்டுக்கொண்டு பழனி மலையில் வந்து அமர்ந்தது. அதன் பிறகு சண்முகனை சமாதானப்படுத்த சிவனும் சக்தியும் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர்.
பழனியில் பாய்ந்தோடும் சண்முகநதிக்கரையில் இறங்கினர். அங்கே இருந்த இயற்க்கை வனப்பைக்கண்ட சிவனும் சக்தியும் தங்களை மறந்து இயற்க்கையின் எழிலை ரசித்தவன்னம் இருந்தனர். அப்போது சக்திக்கு திடீரென்று நாம் எதற்கு வந்தோம் என்ற நினைவு வந்தது. முருகன் கோபமாக வந்தானே அவனைத்தேடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
சிவனை அழைத்தபோது, இயற்க்கையின் அழகை ரசித்துக்கொண்டிருந்த அவர் மனம் அதிலிருந்து விளக்க மறுத்தது. எனவே சக்தி மட்டும் முருகனை தேடிச்செல்ல ஆயத்தமானார்.
அப்போது சிவனை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார் அன்னை. பிறகு முருகனை சமாதானப்படுத்த தன சக்தியை ஒன்றாக திரட்டி வேலை முருகனுக்கு அளித்தார்.
இப்பொழுதும் பழனியில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பழனிக்கு வெளியில் பெரியாவுடையார் கோவில் உள்ளது. இதன் பெயர் காரணம், சிவன் சக்தியை பிரிய மனமில்லாது விடைகொடுத்ததால், பிரியாவிடையார் என்றும். பிரிந்து சென்றாலும் சிவனை ஒரு பாகமாக கொண்டு என்றும் பிரியாத அன்னை, பிரியாநாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.
நாளடைவில் இது மருவி பெரியாவுடையார் என்றும் பெரியநாயகி என்றானது.
பெரியாவுடையார் கோவிலின் சிறப்புகள் :
* இக்கோவில் சண்முக நதிக்கரையோரம் அமைந்துள்ளது
* சிவலிங்கம் மேற்குபார்த்து (சண்முக நதியை பார்த்து ) அமைந்தது சிறப்பு
* இந்த கோவிலில் சக்தி தேவியின் எந்த சொரூபமும் இல்லை சிவன் மட்டும் தனியாக உள்ளார்
இத்தகைய சிறப்பு மிக்க ஆலயம் பழனியிலிருந்து 4 கீ.மீ தூரத்தில் உள்ள மானூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
அடுத்த பதிவில் சிந்திப்போம்!!
ஓம் நம சிவாய!!!